எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து பொங்கல் போட்டி 2016 -----எண்ணம் 05 ----தலைப்பு...

எழுத்து பொங்கல் போட்டி 2016 -----எண்ணம் 05 ----தலைப்பு -- பொங்கல் பாடல்கள்---அவை புதையல் பேழைகள் 

 
தமிழ் மண்ணின் பொங்கல் பாடல்கள் கேட்போரை  ஈர்க்கும் அழகைக் கொண்டவை என்று சொன்னால் போதாது; 

மண்ணின் மணம் கமழும் பாடல்கள் என்று பாராட்டினாலுமே போதாது.

அவற்றை புதையல் பேழை என்றே போற்ற வேண்டும். ஏனெனில்,அப்பாடல்களில் கலைத் தன்மையும் கல்வித் திறனும் வெளிப்படுகின்றன. காரணம், தமிழர்களின் கடந்த கால சரித்திரம் மிகப் பெரிது; தமிழர்களை சிறந்த கல்வி வம்சத்தினர் என்றும் சொல்லலாம். 

தமிழரின் பொங்கல் பாடல்கள்..... ஆகா! ..... எத்தனை கருக்களில் படைக்கப் பட்டிருக்கின்றன!
காதல்,நேசம்,வீரம், செல்வம், ஏழ்மை,புராணக் கதைகள், பொங்கல் விழாவோடு சம்பந்தப்பட்ட  வீரர்கள்,தலைவர்கள் பற்றிய தகவல்கள், கற்பனைக் கதைகள்;  இது  மட்டுமா? இன்னும் எத்தனை கருக்கள்? எதை சொல்லாமல் விட முடியும்? இன்று ஆங்கில மொழி வழி கல்வி கற்று கணணி மூலமாகவும், அலைபேசி இணையதளம் வழியாகவும் மேற்கத்திய இசைப் பாடல்களை மட்டுமே கேட்கும் வெளிநாடு வாழ் தமிழ் இளைஞர்களை எப்படி இந்த இனிய பாடல்களை கேட்க வைப்பது? வழி இருக்கிறது. அந்த இளைஞர்கள் வழியிலேயே சென்று அவர்களை இப்பாடல்களை ரசிக்க வைக்க யூட்யூப் போன்ற வலைத்தளங்களை உருவாக்குவதன் மூலம் அவர்களை ஈர்க்கலாம். அவர்களிடம் ஆர்வத்தை வெற்றிகரமாக ஊட்டி விட்டால், பின் அவர்கள் மூலமாகவே அவற்றை விருத்தியும் செய்து விடலாம்.அவர்கள் மூலமாகவே இப்பாடல்களின் புகழை பரப்பவும் செய்யலாம்; அவர்கள்தான் பலர் மென்பொருள் வல்லுனர்களாய் இருக்கிறார்களே! பின் நமக்கென்ன கவலை?

திக்கெட்டும் தமிழின் புகழ் பரப்ப வேண்டும். 
தமிழர் பண்டிகைகள் பற்றிய தகவல்களையும் பரப்ப வேண்டும்! 
இசை என்னும் அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில் அவை பயணிக்கட்டும்!



 


பதிவு : M Kailas
நாள் : 17-Jan-16, 10:21 pm

மேலே