சாசனங்களுக்குள் அடங்காமல்.. நிகழ்வுகளுக்குள் ஒதுங்காமல் மனம் கலைந்து ஒழிந்தது...
சாசனங்களுக்குள் அடங்காமல்..
நிகழ்வுகளுக்குள்
ஒதுங்காமல்
மனம் கலைந்து
ஒழிந்தது
யாப்பிட்ட
வலம்புரிகள்
இசைத்திட்ட
மோன கானங்கள்
காற்றில் கரைந்து
மாட்சிமையில்
மயங்கித்
தெளிந்தது
இனிவரும்
நாளும்
ஏகாதசியாயிருக்க
போய்வந்த
போகனின் பற்களும்
அழிந்தது
பள்ளு பாட்டறைந்த
பாரதி
கல்லுடைப்பானுக்குச் சொன்னான்:
``பூலோகம் சுற்றவில்லை
காலாவதியான
கள்ளுப்பானை
கலங்கி
வழிந்தது ''
இருக்கின்ற
ஒன்றிரண்டு சிகையும்
இல்லாமல்
போய்விடுமென்று
பார்வையாளர் புத்தகத்தில்
பதியவிட்டுப் போன
இதைப்படித்த
என் நண்பனின்
எழுத்தில்
மேதாவித்தனம்
தெரிந்தது.
சுசீந்திரன்.