எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாட்டு முறை மூன்றாம் நாளில்...

நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாட்டு முறை

மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவரிற்கு பதவியுயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளேயாகும். இன்று மீனாட்சி அம்மன் கல்யானைக்கு கரும்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவார்.

மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண் பொங்கல்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 21-Sep-17, 11:50 am

மேலே