சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் அந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கவில்லை ,...
சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் அந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கவில்லை , ஆனால் அதை சுவாசிக்கும் நாம் ,
அதன் பலனை அனுபவிக்கும் நாம் ,
அதனால் பயன் பெற்ற நாம் ,
நாளும் நமக்குள் போராடுகிறோம் ,
சாதி மதங்களுக்காக ,
அரசியல் காரணங்களுக்காக ,
பேராசை , சூழ்ச்சி , பொறாமை, போட்டி
எனும் இழிவான எண்ணங்களுடன் ,
அறிவாயுதத்தைக் கூர்மழுங்க செய்து
அன்பு , பண்பு , பாசம் , நேசம்
ஆகியவற்றைக் கைவிட்டு ,
ஒற்றுமையை அடியோடு ஒழித்து ,
மொழி , இனம் கலாச்சாரத்தை மறந்து ,
அந்நியமோகம் எனும் ஆழ்கிணற்றில் விழுந்து ,
புதுமை , புதுயுகம் என்று கூறிக்கொண்டு
பழமையை மறந்து , பகையை வளர்த்து ,
இயற்கை வளங்களை அழித்து ,
செயற்கையாக வாழ்ந்து வரும் இந்த சமுதாயம்
பொய்யயையும் போலியையும் நம்பி ,
கற்பனை வாழ்வை நடத்திடும் நாம் ,
சுயஅறிவுடன் சிந்தித்து செயலாற்றுவது
நமது கடமை மட்டுமல்ல ,சுதந்திரம் பெற்றுத்தந்த தலைவர்களுக்கும் தியாகிகளுக்கும் நாம் செய்கின்ற கைம்மாறு ஆகும் என்பதை உணர வேண்டும் .வாழ்க தாய்த்திரு நாடு , வளர்க ஒற்றுமை !சுதந்திர தின நல்வாழ்த்துகள் !
சாதி மதங்களுக்காக ,
அரசியல் காரணங்களுக்காக ,
பேராசை , சூழ்ச்சி , பொறாமை, போட்டி
எனும் இழிவான எண்ணங்களுடன் ,
அறிவாயுதத்தைக் கூர்மழுங்க செய்து
அன்பு , பண்பு , பாசம் , நேசம்
ஆகியவற்றைக் கைவிட்டு ,
ஒற்றுமையை அடியோடு ஒழித்து ,
மொழி , இனம் கலாச்சாரத்தை மறந்து ,
அந்நியமோகம் எனும் ஆழ்கிணற்றில் விழுந்து ,
புதுமை , புதுயுகம் என்று கூறிக்கொண்டு
பழமையை மறந்து , பகையை வளர்த்து ,
இயற்கை வளங்களை அழித்து ,
செயற்கையாக வாழ்ந்து வரும் இந்த சமுதாயம்
பொய்யயையும் போலியையும் நம்பி ,
கற்பனை வாழ்வை நடத்திடும் நாம் ,
சுயஅறிவுடன் சிந்தித்து செயலாற்றுவது
நமது கடமை மட்டுமல்ல ,சுதந்திரம் பெற்றுத்தந்த தலைவர்களுக்கும் தியாகிகளுக்கும் நாம் செய்கின்ற கைம்மாறு ஆகும் என்பதை உணர வேண்டும் .வாழ்க தாய்த்திரு நாடு , வளர்க ஒற்றுமை !சுதந்திர தின நல்வாழ்த்துகள் !
பழனி குமார்
15.08.2019