எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மயிலிறகு குட்டி போடும் என்று புத்தகத்திற்குள் புதைத்து வைத்திருந்தாய்...

மயிலிறகு 
குட்டி போடும் என்று
புத்தகத்திற்குள்
புதைத்து வைத்திருந்தாய்

அது மூடநம்பிக்கை 
என்றாலும் 

உன் காத்திருப்பும் 
ஆர்வமும் 
வேண்டுதல்களும்
கடவுள் மீதான 
நம்பிக்கையும் பொய்த்து 
விடக்கூடாதென்றே

குட்டியாய் மயிலிறகு கிடைக்காமல் 
நீ கண்ணயர்ந்த போது
உன் புத்தக மயிலிறகை குட்டியாய் கிள்ளி கூடவே வைத்து விட்டேன்

நீ துள்ளிக் குதித்த ஆனந்தம் இன்னும் என் கண்களுக்குள்

பின்னொரு நாளில் நீயே புரிந்து கொண்டாய் 
மயிலிறகு குட்டி போடுமென்பது மடத்தனமென்று

ஆனாலும் 
அந்த மழலைப் பருவ ஆனந்தத்தை ஒரு மயிலிறகைவிட வேறொன்றும் கொடுத்திருக்காது.


நாள் : 20-Mar-20, 12:17 am

மேலே