எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று வேலைவிட்டு வீடு வந்து சேர்ந்ததும் மின்னஞ்சல் வாயிலாக...

இன்று வேலைவிட்டு வீடு வந்து சேர்ந்ததும் மின்னஞ்சல் வாயிலாக வந்திருந்த என்னுடைய அன்புத் தோழரின் ஒரு பதில் மின்னஞ்சல் என் மனதை ரொம்பவும் நெகிழச் செய்தது !

வழமையைப் போல ஏதாவது மெல்லிசை கேட்க வேண்டும் என்று என் மனம் அபிப்ராயப் பட்டது !

என் மனம் எப்போதெல்லாம் ரணகளப் படுமோ அப்போதெல்லாம் ஏதாவது குழந்தைகளின் பாடல் நிகழ்ச்சி கேட்க வேண்டும் போல இருக்கும் எனக்கு !

அந்த வகையில் இன்றும் ஒரு ஐம்பதாவது தடவையாக "அனர்காவின்" குரலில் செத்துப் போக வேண்டும் என்று முடிவில் யு டியுப் மூலம் அனர்காவை தேடினேன்.....

இந்த அனர்கா ஒரு கேரளத்து குயில் என்று நினைக்கிறேன்..என்னை இவளைப் போல யாரும் இதுவரை இசையால் கொன்றுப் போட்டதில்லை !

என் கணக்கின் படி இந்த குழந்தைக்கு ஒரு பன்னிரண்டு வயது இருக்கலாம்...இவளின் தமிழ் உச்சரிப்பும், குரலில் இருக்கும் காந்த சக்தியும் என்னை அணு அணுவாய் கொன்றொழிக்கும் என்றால் அது மிகையாகாது !

எனக்கு எப்போதெல்லாம் என் உயிர் என் கண் முன்னே போவதைப் பார்க்க ஆசையோ அப்போதெல்லாம் இந்த அனர்காவின் குரலில் தஞ்சம் அடைவேன்..நீங்களும் பாருங்கள் அவளின் மூன்று படலைகளை மட்டும் இங்கே இணைகிறேன் !

இவள் தமிழ் பிள்ளை இல்லை என்றாலும் இவளில் உள்ள தமிழ் எனக்கு அமிதர்மாய் இருக்கிறது.....





நாள் : 9-May-14, 8:47 pm

மேலே