நிலையில்லா உலகில் நிஜமில்லா வேடம் தரித்து நிறைவில்லா ஆசைக்காய்...
நிலையில்லா உலகில்
நிஜமில்லா வேடம் தரித்து
நிறைவில்லா ஆசைக்காய்
நிம்மதில்லா மனிதர்களுள்
நிசப்தம் கொண்டு நிலம்புகும்
நிமிடங்கள் வரையுள்ள
நிகழ்வுகள் யாவையும்
வாழ்க்கை மேடையில்
அரங்கேற்றுகிறது..
மனித உயிர்..!
இந்நிரல்களுக்காய்
நிறைகுறை என்றே
நிமிர்ந்து நின்று
நீவீர் அடியாளாய்
விடியல் காண
எழுத துடிக்கிறாள்....!!
...கவிபாரதி...