ஒவ்வொருவரும் ஆசான்களே! ஆம் கற்றுத் தருபவர் தான் ஆசான்...
ஒவ்வொருவரும் ஆசான்களே!
ஆம் கற்றுத் தருபவர் தான்
ஆசான் என்றால் மானிடராய்ப் பிறந்த
ஒவ்வொருவரும் ஆசான்களே !
மழலை தொடங்கி
மனதால் பக்குவம்
அடைந்தவர்கள் வரை
ஆசான்களே!
கற்றுத் தேர்ந்தேன்
பல பாட புத்தகங்களை
கள்ளமில்லாத மழலை உணர்த்தியது
வாழ்க்கையின் அர்த்தத்தை
நொடிப்பொழுதில் .......
பக்குவமடையாதது தான்
அவர்களது மனது
ஆனால் சத்தமில்லாமல் புகட்டுகிறது
வாழ்வின் பல பாடங்களை ....
சண்டையிட்டுக் கொண்டனர் தங்களுக்குள் ...
சின்னஞ்சிறு தவறுகளுக்காக
பால் மனமல்லவோ
பத்து நிமிடங்களிலேயே
சேர்ந்துவிட்டனர் .
நிலையில்லாத வாழ்க்கையில்
நிதம் நிதம் சண்டையிட்டுக்கொள்ளும்
வீணர்களுக்கு ....
மறப்போம் மன்னிப்போம் என்ற
நிஜத்தின் நிதர்சனத்தை
தன சிறிய செய்கைகள் மூலம்
அழகாய் உணர்த்துகிறார்கள்.
ஆம் மழலைகளும் aasaankale
ஜத்தின் nitharhthai
Thankalukkul
Pakkuvamadaiyaathu