அ...ஆ(அவள் ஆளவந்தாள்)

தானாக கிடைத்த எதையும்,
வீணாக ஏற்காத என் மனது,

பாழாகிபோன உன் நினைவை,
உயிரினும் மேலாக எண்ணி,

வாடிய பயிர் போல வதைந்து
தேடிய உன் பிம்பங்களை,

கொடிய விஷமென எண்ண வைத்து
விடிய விடிய என்னை தூங்காமல் செய்து,

எங்கேயோ போய்கொண்டிருந்த என்னை
உன்னை நோக்கி ஆட்கொண்டாயே...!!
என்னை ஆளவந்தவளே...???

எழுதியவர் : மனோ ரெட் (30-Jan-13, 6:47 pm)
பார்வை : 115

மேலே