காசு,பணம்,துட்டு......!!!!

பணம் என்றால் பிணம் கூட
வாயை திறக்கும் போது,
பிணமாக போகும் மனிதன்
பணத்திற்கு பறப்பதில் அதிசயமில்லை..!!!

காந்தி சிரிக்கும் காகிதத்திற்கு
கிடைக்கும் மரியாதை,
காந்திக்கு கூட கிடைக்காது,
இதில் பணமில்லா வெறும் மனிதனுக்கு
எங்கே கிடைக்க போகிறது..??

கிழிந்த பணத்தை கூட
ஒட்டி மடித்து காயவைத்து
பணம் பண்ண தெரிந்த மனிதனுக்கு
மானம் கிழிந்து தொங்கினால் கூட
கண்களுக்கு தெரியாது..!!

பணத்திற்கு பேயாய் அலைந்து
மனித குணம் தொலைத்து
இரக்கமில்லாத உடலாய்
வீதியில் திரியும் இவர்களுக்கு
தெரிந்த எல்லாம் பணம் மட்டுமே..!!

கண்ணாடி போல வெள்ளை சட்டையில்
உள்ளாடை தெரிந்தாலும் கவலை இல்லை
என் பணத்தை உலகிற்கு காட்டுவேன்
என கேவலமாய் பெரிய மனிதர்கள்..!!

அழிவு நேரம் வருகையில்
ஒற்றை நாணயம் கூட
உன் பிணத்திற்கு துணைக்கு வராது
என தெரிந்தும் நீ போடும் ஆட்டம்
உனக்கே நீ ஆடும் இறுதி ஆட்டம்..!!

பணம் பத்தும் செய்யும்
இன்னும் கொஞ்ச நாள் போனால்
பணம் மட்டுமே மனிதனை செய்யும்...!!

எழுதியவர் : மனோ ரெட் (25-Jun-13, 4:42 pm)
பார்வை : 145

மேலே