நீ யார் என்று உனக்கு தெரியுமா...????

நீ யாரென்று உனக்கு தெரியும் முன்பே,
நீ யாரென உலகம் உனக்கு சொல்லி விடும்..!!

யாராகவும் நீ இருக்க ஆசைப்படாதே,
யார் யாரெல்லாம் உன் போல
இருக்க ஆசைபடுகிறார்கள் என்று பார்..!!

யாராக நீ இருந்தாலும் கவலை கொள்ளாதே,
யார் உன்னை பற்றி கவலை கொண்டாலும்
மயங்கி கலங்கி விடாதே..!!

யார் யாரெல்லாம் உன்னை,
யாரென கேட்டார்களோ,
அவர்களிடம் நீ யாரென காட்டி விடு..!!

யாரோ சொன்னார்கள் என்றும்,
யாருக்காகவோ தான் என்றும்,
நீ யாரென்பதை மறந்து விடாதே..!!

யாருக்காவது நீ தேவை எனில் மட்டுமே
யாரும் உன்னை யாரென கேட்பதில்லை..!!
யாருக்காகவும் நீ அழுது விடாதே
யாரும் உனக்காக அழ போவதில்லை..!!

நீ யாரென உனக்கு தெரிந்தால்
நீ யார் என்று உன்னிடம்
யாரும் கேட்க முடியாது...!!
எப்போதும் நீ நீயாகவே இரு...!!

யாருக்காகவும் நீ மாறாதே,
யாருக்காகவோ நீ மாறினால்
உன்னை யாரென நீயே கேட்பாய்..!!

எழுதியவர் : மனோ ரெட் (10-Jul-13, 2:58 pm)
பார்வை : 393

மேலே