படித்ததில் பிடித்த கவிதை மலர் :பாராட்டுக் கவிதை) -அசந்தினி...
படித்ததில் பிடித்த கவிதை மலர் :பாராட்டுக் கவிதை)
-அசந்தினி
உயிர்க் காதல்
அன்பான காதலனே
ஆசை வைத்தேன் உன் மேலே
இளகாதோ உந்தன் மனம் - இந்த
ஈஸ்வரியை நினைத்து...
உனக்காக காத்திருப்பேன்
ஊர் கூடித் தடுத்தாலும்.
என்னோடு சேர்வதற்கு
ஏனோ நீ தயங்குகிறாய்?
ஐயம் கொள்ளாமல் அன்பைத் தந்து விடு
ஒரு வார்த்தை சொல்லி விடு
ஓடோடி வந்திடுவேன்
ஒளவையாக போனாலும் அரவணைத்து மகிழ்விப்பேன்!
அஃதுனக்கு புரியாதோ?
ஆசை வைத்தேன் உன் மேலே
இளகாதோ உந்தன் மனம் - இந்த
ஈஸ்வரியை நினைத்து...
உனக்காக காத்திருப்பேன்
ஊர் கூடித் தடுத்தாலும்.
என்னோடு சேர்வதற்கு
ஏனோ நீ தயங்குகிறாய்?
ஐயம் கொள்ளாமல் அன்பைத் தந்து விடு
ஒரு வார்த்தை சொல்லி விடு
ஓடோடி வந்திடுவேன்
ஒளவையாக போனாலும் அரவணைத்து மகிழ்விப்பேன்!
அஃதுனக்கு புரியாதோ?