காலை வணக்கம்

காலைப்பனியின் குளிரில்...
புல்வெளிகள் அயர்ந்து உறங்க...
கரையும் காகங்களின் கரைச்சல் தூக்கம் கலைத்திட...
எங்கோ ஒலிக்கும் குயிலின் கூவல்
இனிய கானம் இசைத்திட...
புன்முறுவலுடன் பூச்செடியின் மடியில் சோம்பல் முறித்து...
இலைகளுக்குள் மறைந்து கொள்ளும் பூவைப் போன்று...
போர்வைக்குள் புரண்டு படுக்கும் தோழிக்கு...
இனிய காலை வணக்கம்...!

எழுதியவர் : ராஜதுரை (20-Jan-13, 9:22 am)
பார்வை : 708

மேலே