கோபமாய்...

வாலை ஆட்டிடும் குருவிக்கே
வந்த தென்னவோ கோபமெல்லாம்,
சோலை வனத்திலே காதலென்று
சொக்கிக் கிடந்ததைக் கண்டதுவோ,
வேலை முடிந்ததும் விட்டுவிட்டு
விறகு பொறுக்கிடும் வேடிக்கையே,
காலை முதலே காத்திருந்தும்
காதலன் வராத காரணமோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Jan-13, 8:59 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 170

மேலே