உன் நினைவிலே
உடலிலே உயிர் இருக்கும் -ஆனால்
அசைவின்றி லயித்திருக்கும் உன் நினைவிலே.....
உணவிருக்கும் பசியிருக்கும் -ஆனால்
உண்ண மனமின்றி அடம்பிடிக்கும் உன் நினைவிலே....
ஊரிருக்கும் உறவிருக்கும் -ஆனால்
தனிமையையே மனம் ரசித்திருக்கும் உன் நினைவிலே.....
என் சிந்தனையும் செயலையும்
திருடிவிட்டாய் நீ....
செய்வதறியாமல் தவிக்கிறேன் நான்...
கனவிலே வாழ்ந்து வருகிறேன்....
நிழலாய்த் தொடரும் உன் நினைவிலே...-இது
நிஐமாகும் நாள் எந்நாளோ என்று ஏங்கியபடி!!!.....