ஆக்கம் ..ஓர் ..பயன்.. நிலை!

சுடர் ஒளி
வெளியிடும்
விளக்கது ...
திரி நுனி
தீயாமல் ஒளி
நிரப்புவதில்லை.
தண்ணீரில்
தோன்றும்
தாமரையே
ஆயினும் ,
அத்தண்ணீரில்
அமிழ்ந்து
போவதேயில்லை.
கதிரவனின்
கிரணம் பாரா
மண் எதுவும்,
வளம் ஒன்றைப்
பெற்றதில்லை.
இயல்பு...யதார்த்தம்,
இயக்கம்...
பேருண்மைதனை,
உணர்ந்து கொள்ள
ஆக்கம் யாவையும்
அதன் பயன் நிலை.
அதன்
'பயனுள் இழை'
'பயனில் உறை'....
****************************************