சோகம் பொங்கிடும் இதயம்

ஒய்யாரமாய் நிற்பதால் நான்
ஒருவனாய் வாழ்ந்திட இல்லை !

இறந்த உயிர்களின் மேலே
இரக்கமின்றி நிற்கவில்லை !

மடிந்தவர்களை நினைந்து
இடிந்துப் போய் உள்ளேன் !

இருந்திடும் நேரமோ சிறிது
இறப்பும் என்னை தேடுது !

சோகம் இதயத்தை வாட்டுது
சோறாக காலமும் நெருங்குது !

விடியல் வரும் வேளையை
விழிகள் இருக்காது கண்டிட !

இறுதியாய் உலகத்தை காண்கிறேன்
இதுவரை வாழ்ந்ததை நினைத்திட்டு !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (8-Feb-13, 7:36 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 143

மேலே