விண்ணில் மாட்டிய ஊஞ்சல் கயிறு....!
![](https://eluthu.com/images/loading.gif)
விழுகின்ற மழைத்துளிகள்
விண்ணில் மாட்டிய ஊஞ்சல் கயிறு....!
விளையாடி நான் அமர
விரிந்து மலர்ந்த தாமரைப்பூ......!
தள்ளி என்னை தாலாட்ட மெல்ல
தாவி வரும் தென்றல் காற்று....!
மண்வாசனை சுவாசமாக
மனம் தனிலே தமிழ் அமுதூட்டும்...!
அ-----ழகு பட சிரிப்பதற்கே
ஆ----யுள் முழுதும் நேரமிருக்கு......
இ-----ன்பமுடன் ரசிப்பதற்கே
ஈ-----ரெட்டு திசை விரிந்திருக்கு.......
உ-----லகமெந்தன் விரல் நுனியில்
ஊ----ரெங்கும் உறவினர்கள்
எ-----திர்படுவது தெய்வங்கள்
ஏ-----காந்தம் எந்நாளும்
ஐ-----ஸ்வர்யம் கதிர் கொடுக்கும்
ஒ-----ற்றுமையான நினைவுகளால்
ஓ---ர் உலகம் கவி உலகம்....
அ----வ்வாறே சுகம் தருதே
இ-----க்தே நம் எழுத்துலகம்......!