தாவணிக்கயிறு

நிலவை
பரிகாசிக்கும்
உன் புன்னகை ...

நினைவை
பரிபாலிக்கும்
உன் நேசம் ...

கனவில்
கண்விழிக்கும்
உன் சிநேகம் ...

இரவை
ஈரமாக்கும்
உன் ஸ்பரிசம் ..

எல்லாம் சேர்ந்து
கட்டிவைத்திருக்கிறது
இந்த காளையை
உன் தாவணிக்கயிறு...!!!

எழுதியவர் : அபிரேகா (2-Mar-13, 3:53 pm)
பார்வை : 105

மேலே