ரத்த தான முகாம்!

அடிபட்டு வெளிப்படும் என் குருதி
மற்றவர் பயன்படவே குழாயில் ஊசியிட்டு
இன்று பதபடுத்த படுகிறது ரத்தம் சேமிப்பானில்!

நானென்னடா நான்கு முறை தான்
வந்தவர் எல்லாம் பத்து பதினைந்து
இருபதென்று கணக்கிட்டு கொண்டனர்!

குருதி பார்த்து மயங்கியவர் எல்லாம்
கண்கள் மூடி வலியை எள்ளி
நரம்பினில் வழியிட்டனர் தம்குருதிக்கு!

மூடிய கண்கள் திறந்தவர் தம்
நண்பர்களை கண்டு புன்னைகையோடு
மீண்டும் கண் மூடி ஆழ!

ஒலிப்பான் ஒலித்து நிரம்பியது என்றது
வலியில்லை மீண்டும் ஊசி எடுக்கையில்
ஒட்டு போட்டு அடைத்த ஓட்டை போல்
கையிலே பிளாஸ்திரி!

வளைத்தே வலித்து கரங்கள் இறுகி
மனம் போன திசை தெரியாமல்
அமைதிமட்டும் கண்களில் கையில் பழச்சாறுடன்!

என்றும் அன்புடன்,
ரசல்

எழுதியவர் : ரசல் பத்மநாபன் (7-Mar-13, 3:23 pm)
சேர்த்தது : Rasal Padmanaban
பார்வை : 209

மேலே