இரு கோணங்கள்

வாழ்விலே நேரமெல்லாம்
வருத்தமாய் போவதில்லை
வசந்தங்கள் வருகின்ற நேரம்
வழக்கமாய் ஆவதில்லை

இரண்டுமே கலந்த வாழ்வே
இனிமையின் அஸ்திவாரம்
இதயத்தில் சாந்தி நிற்க
இறைவனின் சாகா வரம்

சந்தோஷம் வரும் போது
சந்திக்கத் தெரிய வேண்டும்
சங்கடம் வந்த நேரம்
சிந்தித்துப் புரிய வேண்டும்

எழுதியவர் : நா.குமார் (11-Mar-13, 5:07 am)
சேர்த்தது : kavikumar09
பார்வை : 109

மேலே