ரோஜாவின் கண்ணீர்!

காதலர் தினத்தின்
முந்தைய நாளில்
பதறித் துடித்தது
அந்தப் பரிதாபத்திற்குரிய ரோஜா!
"யாரோ இருவர் இணைவதற்காய்
இணைந்திருக்கும் எங்களையேன்
இரக்கமின்றிப் பிரிக்கிறீர்கள்?"
கதறி முடிக்குமுன்னர்
காம்புடன் பறிக்கப்பட்டது
இரட்டையாய்ப் பூத்திருந்த
அந்த இளஞ்சிவப்பு நிற
ரோஜாக்களில் ஒன்று!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (18-Mar-13, 4:53 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 105

மேலே