கவிதை ஏப்பம்...

கற்பனை ஏக்கத்தை
உணவாய் உண்டு


கவிதை ஏப்பத்தை
தினம் நான் கண்டு


வாழ்க்கை ஏட்டினைப் படித்தேன்
நாளும் பூக்களாய் சிரித்தேன்


எழுத்தெனும் நீரினில்
நாளும் குளித்து


வார்த்தை ஆற்றினில்
குதியாய் குதித்து


ஆடுவோம் வாருங்களேன்
என் அருமை தோழமையே..!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Mar-13, 5:16 pm)
பார்வை : 132

மேலே