உங்கள் வழிசுவடுகளில் .......................

வாழ்ந்து சென்ற உங்கள் வாழ்கை - இன்று
வழி சுவடு எங்களுக்கு

வாழமுடியுமா ? உங்களைப்போல் - எங்கள்
மனதில் கேள்வி எழும் தினம்

வறுமை இடையில் வந்த நிலை - ஆனால்
வளமாய் வாழ்ந்து மறைந்த நிலை

இறைவனை நாடி உங்கள் உரை - உடன்
மாறியது உங்கள் வாழ்வு நிலை

உலாமக்களுக்கு கொடுத்த உயர்ந்தநிலை
பண்ணை வீட்டின் பரந்த நிலை

வன்மை இல்லாத மென்மை உபதேசம்
அறிவுரை கேட்டு மாறுவோர் ஒரு புறம்

பாசங்களை பிள்ளைகளிடம் பிரிக்காத - பண்பு
உயரிய எண்ணம் உங்களிடத்தில் உண்டு

தவறுகளை சுட்டி காட்டுவதில் - எப்போதும்
கண்டிப்பும் இருந்ததுண்டு

தொழுகையை இன்னும் நேரத்துடன் முடித்து
வாய் பேசா நோன்பை வழக்கமாய் நிறைவேற்றி

வாழ்கையே இறைவனுக்காக என்று
வாழ்ந்து மறைந்த உங்கள் வாழ்க்கை

உங்கள் வழிசுவடுகள் நோக்கி நாங்களும் ..........


ஸ்ரீவை.காதர் .

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (28-Mar-13, 9:45 pm)
பார்வை : 95

மேலே