குழந்தை...
என்னிடம் தெரிவிப்பது என்ன சைகையில் ...
உன் அழுகையில் கூட ஆனந்த ராகம் ...
உன்னிடம் பேசுவதற்கு எங்கு கற்றுக்கொள்வேன்...
உன்னுடைய சங்கேத பாசைகளை....
கண்ணசைவு கூட கவிதை பாடும் ...
பற்கள் இல்லா உன் வாயசைவில்....
எத்தனை ஹார்மோனியங்கள் இட்டுக்கட்டியிருக்கும்...
என் காதினிலே மௌன இசையாய்....
பூமி படா உன் பாதம் வருட....
சிலிர்க்கும் உன் உணர்வினில்தான் எத்தனை...
வெள்ளி நீர்வீழ்ச்சி....
மழலையே மழலையே உன் மயக்கும் நிகழ்வுகளில் நான்
மறப்பதுதான் என்னையே!