ஆணின் கற்ப்பு எனப்படுவது யாதெனின்

நம் மனைவியை
தவிர்த்து வேறுபிற
பெண்களை கற்ப்பனைகளிலோ,
கனவுகளிலோ,காமச்சிந்தனைகளில்
சித்தரிக்காது இருத்தல்
வேண்டும்!
அவர்களை காம
பார்வை கொண்டு
பார்க்காது இருத்தல்
வேண்டும்!
அவர்களோடு எந்த
சூழ்நிலைகளிலும் காமம்
கொள்ளாது இருத்தல்
வேண்டும்!
நம் அங்க
அவயங்களை கொண்டு
அவர்களுக்கு காம
உணர்வுகளை தூண்டாது
இருத்தல் வேண்டும்!
உதாரணமாக
கண் பார்வையால் காம செய்கைகளை செய்வது
வாயினால் காமம் மேலோங்க பேசுதல்
கை,கால்களால் எழுதி அல்லது தீண்டி
காமத்தை தூண்டுவது
மற்ற உடல் உறுப்புகளை காண்பித்து காம உணர்வுகளை தூண்டுவது
இன்னபிற செயல்ககளை அறவே செய்தல் கூடாது !
திருமணம் ஆகாத
பட்ச்சத்தில் உயிருக்குயிரான
காதலியாக இருப்பினும்
இவற்றை கடை
பிடித்தல் மிகமிக
அவசியம் ஆகும்!
****************************************************************************
ஆணின் கற்ப்பு இவற்றால் கெடாது
மனைவி இறந்த
பின் இன்னொரு
பெண்ணை மணப்பதாலோ!
மனைவியின் உடல்நிலை
சரியில்லா காரணத்தால்
மனைவியின் முழுமன
சம்மதத்தோடும் ஒப்புதலோடும்
இன்னொரு பெண்ணை
மணக்க நேர்ந்தாலோ!
விந்துக்களை தானம்
செய்வதாலோ
(கவனிக்கவும் பிற
பெண்களோடு புணர்ந்து
இல்லை தனிச்சையாய்)!
பிற பெண்களை
தவிர்க்க முடியாத
சூழல்களில் நிர்வாண
நிலையில் காணநேர்ந்தாலோ!
உதாரணம்
பிரசவ வேதனைகளில் உதவும் பொழுது
மன நிலை பாதிப்படைந்த பெண்களை பார்க்க நேர்ந்தால்
உயிரை காப்பாற்ற முயற்சிக்கும் பொழுது
(நீர்,நெருப்பு,இன்னபிற)
ஆடையில்லா நிலையில் இறந்த பெண்ணின் உடலை காணும்போது
தற்ச்செயலாய் குழந்தைக்கு பாலுட்டும் பொழுதோ
பார்க்க நேர்ந்துவிடினும்
(இது போன்ற
சமயங்களில் காம
உணர்வு ஏற்படுபவர்
மனிதரே இல்லை)
ஆண்கள் கற்ப்பை இழப்பதில்லை!
****************************************************************************
இப்படியாக நாம்
இருக்கும் பட்ச்சத்தில்
நம் கட்டளைக்கு
இணங்கி பச்சை
வாழை மரங்கள்
பற்றி எரிகிறதோ
இல்லையோ!
யார் மதிப்பையும்
நாம் கெடுக்கதிருப்போம்
நம் மதிப்பையும்
யாரலும் கெடுக்க
இயலாது!
****************************************************************************
எடுத்து காட்டு:
ராமாயணம்
சீதை கடத்த
பட்ட சமயத்திலும்
ராமனின் கற்ப்பு
சீதையை காத்தது!
திருமறை குரான்
எவன் ஒருவன்
கட்டிய மனைவிக்கு
துரோகம் செய்யாமல்
இருக்கிறானோ நிட்ச்சயமாய்
அவனின் மனைவியை
நான்(அல்லா) எந்த
சமயத்திலும் அவளை
வழி கெடாமல்
பாதுகாப்பேன்!
பைபிள் துணைக்கு
உடலாலும் உள்ளத்தாலும்
இன்னல்கள் செய்யாதவனே
பரலோகத்தில்(சொர்க்கத்தில்)
வீற்று(நுழைவான்) இருப்பான்!
திருக்குறள்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
****************************************************************************கற்போடு இருப்பதால் ஏற்படும் நன்மைகள்
எய்ட்ஸ் ,வீ டி போன்ற உயிர் கொல்லி நோய்கள்
ஏற்ப்பட வாய்ப்பே இல்லை
தலை நிமர்ந்து வாழும் வாய்ப்பு தங்களைத்தவிர
வேறு எவருக்கும் இல்லை
தேவை இல்லாத மன குழப்பங்கள்,சந்தேகங்கள் நீங்கி இனிமையாய் வாழவும், மற்றவர்களுக்கு நல்ல உதாரண புருஷர்களாய் திகழவும் முடியும்.
****************************************************************************
ஐய்ம் புலன்களையும்
அடக்கி ஆனந்தமாய்
நாமும் வாழ்வோம்
பிறரையும் வாழவிடுவோம்!