காதல் வளர்ப்போம்

மனமென்னும் மலர்மொட்டு அன்பு
பார்வைபட்டு மலர்ந்ததடி!

நினைவுகள் இருக்கும் இடம்மட்டும்
அடிக்கடி வலிக்குதடி!

கையளவு மனம் கடலளவு
அன்பைபெற துடிக்குதடி!

போக்கு சொல்லியதுபோதும் வாக்கு
தந்தெனை காப்பாற்று!

கைப்பையுடன் போட்டியிட்டு உன்
கூந்தல் வளர்ந்திருக்குதடி!

மனதுடன் போட்டியிட்டு நம்
காதலை வளர்த்திடடி!

எழுதியவர் : விஷ்ணுதாசன் (27-Nov-10, 6:32 pm)
சேர்த்தது : விஷ்ணுதாசன்
பார்வை : 439

மேலே