பூமி பாதுகாப்பு நாள் வாழ்த்துக்கள்!

அனைத்து இயற்கை ஆர்வலர்களுக்கும் ,பசுமை விரும்பிகளுக்கும் என் உள்ளங்கனிந்த "பூமி பாதுகாப்பு நாள் வாழ்த்துக்கள் !
உலகம் முழுவதும் கண்போன போக்கில் தொழிற் சாலைகளையும் துவங்கி இஷ்டம்போல் வெப்பமயமாக்கலைச் செய்து வந்திருக்கிறோம்.முடிந்தவரை இந்த வெப்ப மயமாக்கலுக்குத் துணை புரியும் பசுமை வாயுக்களை (கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள்) உறிஞ்சிக்கொண்டு நமக்கு நல்ல உயிர் வளியை வழங்கி வந்த மரங்களையும் வெட்டி நகரமயமாக்களை நடத்தி வந்திருக்கிறோம். இப்படியே இயற்கைக்கு முரணான வேளைகளில் ஈடு பட்டு ஓர் நாள் மொத்த வாழ்க்கையும் இழக்கப் போகிறோம்.
இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள்! பூமியில் பசுமை இல்லையேல் உயிர்வாழ்க்கை என்பதே இல்லாமல் போய் விடும்.
எனவே ,இன்றிலிருந்தாவது மாதம் ஒரு மரமாவது நட்டு வளர்க்க உறுதி கொள்வோம்.
நன்கு வளர்ந்த ஒரு மரமானது ஒரு நாளைக்கு ஒன்றரை டன் கரியமில வாயுவை உறிஞ்சக் கூடியது. நகரத்தில் இருப்போர் கூட மொட்டை மாடிகளில் தாவரங்களை வளர்த்து இந்தப் பெரும்பணியில் பங்காற்றிட முடியும்.
எங்கும் இயற்கை! எதிலும் பசுமை! எப்படி இருக்கும் இப்பூவுலகு? இன்றே ஆரம்பிப்போம்! இயற்கையைக் காப்பாற்றுவோம்!

எழுதியவர் : கோவை ஆனந்த் (22-Apr-13, 2:11 pm)
பார்வை : 283

மேலே