என்னவன் ......

சிறகுகள் இருந்தும் பறக்கவில்லை
உறவுகள் இருந்தும் பகிர்ந்ததில்லை
வார்த்தைகள் இருந்தும் பேசவில்லை
உன் அன்பும் துணையும் கிடைக்கும் வரை

இதுதான் வாழ்க்கை என்றிருந்தேன்
இதுமட்டும் வாழ்க்கையில்லை என்றுரைத்தாய்
எதையும் சிந்திக்கும் தெளிவை தந்தாய்

நீ யாரென்று சிந்தித்தேன்

என்னை காக்கும் தாயா ?
போதிக்கும் புத்தனா ?
நேசிக்கும் கணவனா ?
நான் யாசிக்கும் காதலனா?
அன்பை பகிரும் சினேகிதனா ?
நான் கொஞ்சும் குழந்தையா?
வழிகாட்டும் தந்தையா?

இவையாவும் நீயென உணர்ந்தேன்

உன் மூச்சுக்காற்றை மட்டும் என்னில் தரவில்லை
உன்னுள் இருக்கும் உன்னை என்னில் தந்தாய்
நீயாக நானிருப்பேன் நம் மூச்சோடு வாழும்வரை

எழுதியவர் : சக்தி (24-Apr-13, 4:40 pm)
பார்வை : 117

மேலே