சோம்பேறி

ஆதங்கப் படுவதில்
அர்த்தமில்லை
நீ
அதற்காக
பாடு படாத வரை...

சோம்பேறிகளின் மாநாட்டு
தலைவன் நீ என்று
அறிவித்த போதிலும்....
நீ அங்கு செல்ல மறுக்கிறாய்
உன் சோம்பேறி தனத்தால்.

கோபம் கொள்கிறாய்,
ஆவேசம் அடைகிறாய்,
வெட்டி பந்தா போடுகிறாய்,
உழைப்பு தான்
உயர்வு தரும் என்பதை
மறந்து விட்டு....

தேனீக்கு கொட்ட தெரியும்.
வண்டுக்கு பறக்க தெரியும்.
காற்றுக்கு அடிக்க தெரியும் .
மனிதா நீ...
மறந்து விட்டாய்.
உனக்கு உழைக்க
தெரியும் என்பதை...

எழுதியவர் : சிவானந்தம் (26-Apr-13, 10:46 pm)
சேர்த்தது : சிவானந்தம்
பார்வை : 953

சிறந்த கவிதைகள்

மேலே