திருமண வாழ்த்து என் நண்பனுக்கு

தெருவெங்கும் தோரணம் ,
தென்னங்கீற்றினால் ஆன நட்சத்திர அலங்காரம்,
திசைக்கு திசை இசைதட்டின் கோலாகலம் - அங்கு
கூடியவரில் எல்லாம் புத்தாடைகளின் புது வாசம்,
என்ன நிகழ்வு என்றால்...!
அங்கே மணவிழா காண்கிறது இரு பூக்கள்!!
மன்றம் கொள்ளாத கூட்டத்திலும்
எங்கள் நெஞ்சம் புகுந்து வாழ்த்தியது
“மலரும் அழகும் போல்
மங்காது வாழ்கவென்று”..!
இவன் –
வாழ்த்துகளும் வாத்தியங்களும் ஒன்றாக கூடும் நேரம்
உங்கள் திருமணத்தேரை ஓட்டிச்செல்ல காத்திருக்கும்
தோழர்கள்....!

எழுதியவர் : த சுதாகண்ன் (2-May-13, 8:40 pm)
சேர்த்தது : sujimon
பார்வை : 125

மேலே