உன்னை நினைத்து வாழ்வதே என் இன்பம் 555

பெண்ணே...

நந்தவனத்தில்
ஒரு மலர் பறித்தால்...

பிறர் அறியபோவதில்லை...

ஒற்றை செடியில்
மலர்ந்த மலரை பறித்தால்...

அதன் வலியை
உணர்வோர் எத்தனை...

நம் காதல் செடியின்
மலரை நீ பறிக்க
நினைக்கவில்லை...

வேரினை காண
நினைக்கிறாய்...

பூக்களும் சருகாய்
மாறும்...

என தெரிந்தும்
துடிக்கிறாய்...

நீ என்னை மறந்து
சென்றாலும்...

என் விழியில் உன் பிம்பத்தை
வைத்திருப்பேன்...

நான்...

காயங்கள் பல
நீ தந்தபோதும்...

உன்னை எண்ணி
நான் வாழும் வாழ்வே...

எனக்கு சுகம்
தானடி...

என் காதலை நீ
உணரவில்லை...

என்னையுமா நீ
உணரவில்லை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-May-13, 9:39 pm)
பார்வை : 333

மேலே