வெற்றித் தமிழ் மகளே வாழ்க வாழ்க......!
உள்ளுக்குள் நீ
உதைத்த போதே
உணர்ந்தேனடி....
எனக்குள்ளும் இசைக்கும்
என ஏகாந்தமாய்
என் கண்மணி.....
தென்றலென பிறந்தவளே
புயலென நீ வளரடியோ...
திரும்பும் திசையெங்கும் நீ
தமிழின் மணம் பரப்பு.......
திக்கெல்லாம் மகிழ்வுறவே நீ
தமிழ் சொல்ல ஆளாகு......
பயிற்றுக் கொடம்மா நீ
பைந்தமிழை பயிலட்டும் பாரிலுள்ளோர்
பாரின் சென்றெல்லாம் நீ
பணம் பண்ண வேண்டாமடி
பார் போற்ற நம் தமிழ் பண்பாடு
பறை சாற்றி வளரடி நீ.....
திருக்குறளே உன் தாலாட்டு......
தேவாரம் அதைக் கேட்டு.......
திருப்புகழும் படித்திடடி......
திகட்டக் கூடும் என் தாயன்பு......
ஆனால்
திகட்டாததடி.....நம்....தமிழ் அன்பு......!