அ...இ...உ...எ...ஒ...!!!

அதிகமான அன்புக்கு,
அளவின்றி அடிமையாவதே,
அன்புக்கு அடிமை..!!

இல்லாத இறைவனிடம்,
இருப்பதாய் இரப்பதே,
இயலாமையின் இருப்பிடம்..!!

உயிரில்லா உண்மையொன்று,
உண்மைசொல்ல உயிர்பெறுவதே,
உண்மையின் உச்சம்..!!

எண்ணிய எண்ணமெல்லாம்,
எண்ணப்படி எட்டுவதில்லை,
எட்டிப்போவதே எதார்த்தம்..!!

ஒவ்வொரு ஒழுக்கமும்,
ஒப்பனைக்கு ஒவ்வாதெனில்,
ஒழுக்கமும் ஒழுக்கமின்மையே..!!

எழுதியவர் : மனோ ரெட் (17-May-13, 12:28 pm)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 131

மேலே