நீ அறிவாயோ?

புன்னைகையில் என்னைக்
குளிரவைத்தாய் எப்பொழுதும்.

என்னுயிருக்கு உற்சாகத்தை
ஊற்றிக் கொடுப்பாய் முப்பொழுதும்.

கட்டாயம் வருகிறேன் என்பாய்,
முடிவாய் நிச்சயமாய் வரமாட்டாய்.

கேட்டுப்பார் என்பாதங்கள் உரசிச்
சிவந்த அந்த நூலக வாசலை.

ஏமாற்றத்தில் உளையும்வேளை,
மறைவாய் ரசித்தேன் என்பாய்.

எங்கும் எதிலும் விளையாட்டுத்தான்
உனக்கு,வதங்கும் மனம் அறியாய்.

இதயத்தில் பாரத்தை ஏற்றாதே
என்கிறாய்,பாறாங்கல்லாய் பாரத்தை
ஏற்றியதே நீதானே. நன்றாக சும.

எனக்குள் ஏற்றிடும் இந்தச் சுமைகள்
இன்பத்தில் மிதக்கச் செய்யும் கலைகள்,
என்பதினை நீ அறிவாயோ?

எழுதியவர் : தீ (23-May-13, 8:56 am)
பார்வை : 147

மேலே