அன்பு செல்லமே

அன்பு செல்லமே.. உன்னோடு தான்
என்றென்றும் வாழ விரும்பினேன்.
எந்தன் நெஞ்சிலே நீ வந்ததும்
என்றென்றும் உன்னை நினைக்கிறேன்.
உன் சுவாசம் தீண்டும் போது
பெண்மையாகிறேன்.
உன் பார்வை நீளும் நேரம்
வெட்கம் கொள்கிறேன்.
இருந்தும் என் நெஞ்சிலே - சில காயமென்னவோ
நீ வந்த சுவடின் வண்ணமோ ?

கண்கள் மூடினேன்
அந்த இருளில் தெரிகிறாய்.
மேகமூட்டமாய் என் நெஞ்சில்
மெல்ல வருடினாய்.
என் இதழ்கள் பேசும் வார்த்தை
உன் பார்வை தின்னுதே.
நீ மெல்ல சீண்டும் போது
என் உள்ளம் மகிழுதே.
நானாக இருந்தபோது - எனக்கு
நாதியில்லையே.
நீ வந்து சேர்ந்த பின்னே - நாம்
பாதியில்லையே.
இருந்தும் என் நெஞ்சிலே - சொல்
காயம் நேருதே.
உன் குரல் கேட்குமந்த நொடியில்
காயம் மாறுதே.

மேகம் என்பது வெறும்
பெண்ணிற்குவமை இல்லை,
உன்னை கண்டதும் என் எண்ணம் மாறுதே.
மேக கூட்டமெல்லாம் - உந்தன்
அன்பின் சின்னமோ?
என் சுவாசம் தீண்டும் போது துளி வீழுதே.
உண்மை காதல் எங்கு எங்கு ?
நானும் தேடினேன்.
என் ஜீவன் கொள்ளும் காதல்
உண்மை என்கிறேன்.
என் ஆசையெல்லாம் சொல்ல இந்த
ஜென்மம் போதவில்லை.
இருந்தும் உன் இதழில் சொல்ல நினைக்குறேன்..
இருந்தும் என் நெஞ்சிலே.
சில வெட்கம் குட்டி போடுதே.
உன்னை சேருமந்த நாளை தேடுதே!

எழுதியவர் : கவிசதிஷ் (15-Apr-10, 9:05 am)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 1910

மேலே