எனது இந்தியாவிற்கு சில வழிமுறைகள் (2)

நிரப்பிடாத அரசாங்க பணிகளிலெல்லாம்
தகுதி-திறமையென்ற கோணத்தில் மட்டும்
இளைஞர் கூட்டத்தால் நிரப்பிடுவோம்
பிரிவினை வாதத்தை அழித்திடுவோம் !!!!

எல்லையில் நடக்கும் குழப்பத்திற்கு -எப்போதும்
காந்திய வழியே தீர்வல்ல
சமயோசித புத்தியுடன் சிலசமயம்
சுபாஷை ஏற்பதும் தவறல்ல !!!!

அங்குமிங்கும் ஓடும் நதிகளை -அறியாமை
அரசியலால் தடுத்து நிறுத்தி -இதுவே
நேரேமென்று பேதங்கள் பலவூட்டும்
அடாவடி அரசியலுக்கு தீர்வு காண்போம் !!!!

நிலுவையில் உள்ள பல குற்றங்களும் -அதை
கண்டுகொள்ளாமல் இயங்கும் நீதிமன்றங்களும்
புதுதுடிப்புடன் வழங்கும் தீர்ப்பினாலே-நிகழும்
குற்றங்களை குறைத்து தர்மத்தை போற்றுவோம் !!!!

பணத்தினை பெருக்கி பதுக்கிடும் -கல்வி
முறையினை நன்று கற்றுவிட்டோம் -இனி
குணத்தினை பெருக்கி வாழும் கலையினை
அறியும் கல்விமுறையினை கற்றிடுவோம் !!!!!

மட்டை பந்தே விளையாட்டென்று மயங்கியுள்ள
இந்திய இளசுகெல்லாம் தடகளத்தில்
தடம்பதித்து தங்கம் ஈட்டும் சூக்கும -கல்விதனை
அனைத்து அரசு பள்ளியிலும் பயிற்றுவிப்பொம் !!!!

முன்னூறுஆண்டுக்கு முன் முள்மரங்கள்
இங்கில்லை -காற்றின் ஈரத்தை குடிக்கும்
அம்மரங்களின் வேரறுத்து அவ்விடத்தினில்
ஆலவேல மரங்களை நாம் நடுவோம் !!!!

==========================ஜெய்ஹிந்த் !!!!!!!!


அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (23-May-13, 9:51 pm)
பார்வை : 435

மேலே