உனது குரலில்......

பிறவியில் பார்வையை இழந்தும் இசையில் சாதனை படைக்கும் இனிய குரல் வளம் படைத்து வரும் பெண்:
பிறவியிலே பார்வையை இழந்தும் தனது விடாமுயற்சியால் இசைத்துறையில் சாதனை படைந்துவருகிறார் கேரளா மாநிலம் வைக்கம் பகுஇத்யை சேர்ந்த விஜயலட்சுமி, ஒரு வருடத்திற்குள் நூறு ராகங்களை கற்றுக் கொண்டு வீணை இசைப்பதோடு பாடல்கள் பாடி வரும் இவர் பற்றி கவிஞர் பழனி பாரதி தனது கருத்தை இப்படி இடுகிறார்.

”பிறவியிலேயே பார்வையை இழந்த வைக்கம் விஜயலட்சுமி எனது பாடலைப் பாட வந்தபோது பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது. அப்படி ஒரு பரவசம் அந்த முகத்தில் ஒளிர்ந்தது.

அந்தக் குரலில் கே.பி. சுந்தராம்பாள், டி.கே.பட்டம்மாள், பி.லீலா, எல்.ஆர். ஈஸ்வரி போல ஒரு தனித்துவம் ஒலித்தது.
ஆசியா நெட் தொலைக்கட்சியில் ரசிகர்கள் அவரை இந்த வருடத்தின் சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஆணாதிக்கமற்ற - கட்டுப்பாடற்ற - சுதந்திரமான ஒரு பெண்ணின் குரலை நான் விஜயலட்சுமியிடம் உணர்ந்தேன்...”
என்றும் அவர் கூறியுள்ளார்.

கேரளா மாநில திரை விருதுகள் பெற்றவர் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

எழுதியவர் : சாந்தி (25-Jun-13, 11:39 pm)
Tanglish : unadhu kuralil
பார்வை : 75

மேலே