மதிப்போம் பெண்குலத்தை

எதற்கும் எதுவுக்கும் இல்லாத
பாதுகாப்பு மனிதனுக்குண்டாம்...!
முட்டையினின்று வெளி வந்த
குஞ்சு நடந்திடும் உடனே....!
தாயீன்ற குட்டிகள்
தாவிடும் சில மணிக்குள்ளே
யானை கூட பிறந்திட
அசைந்து நிற்கும் நொடிதனில்
மனிதன் பிறக்கிறான்
அவன் நிற்க நடக்க ஆறு மாதங்கள்-இவை
எதற்கும் இல்லாத பாதுகாப்பு
எதுவுக்கும் இல்லாத பாதுகாப்பு
மனிதனுக்குண்டாம்..... கேடுசெய்ய...!
சிங்கத்தை சிங்கம்
யானையை யானை
ஒரு இனம் தன் இனத்தை அழிக்காது
வறண்டது மனுகுலம் நம்பிக்கையின்மையினால்

சின்னஞ்சிறு சிட்டே....
வார்த்தையில் வராத சோக கீதமே.....
மொழிகூற கூடா வேதனையின் பள்ளத்தாக்கே..
மலை மாறா தங்கிருந்தாலும்
நம்பிக்கைக் கடையாளமே இல்லையே...!
உயிர் நீக்கும் குறைகள் ஏதும் உனக்கில்லை...
உயர் வானங்களுக்குயரமாகவும்
ஆழ்கடலின் ஆழத்திற்காழமாகவும்
உயர்வாம் உம் பெண்மைதான் வென்றது...!
நீ மாண்டு வாழ்ந்திருக்கிறாய்...
நாங்கள் வாழ்ந்து மாண்டுகொண்டிருக்கிறோம்...

ஈமச்சடங்கு நடந்துவிட்டதாம்
வந்தேமாதரம் சொன்ன இம்மண்ணிற்கு
உன் பெயர் சொல்ல வக்கில்லையடி
நானித்தலை குனிகிறோம்...
உனைப்பெற்ற வயிரைக்கூட காணமுடியலை...
இந்தியத்தாயே காண்கிறோம் உம்மில்...
தேசத்து ஒவ்வொரு ஆண்குடியும்
ஒரு பெண்மணிக்கு முன்
ஒரு நிமிடம் தலைகுனிந்து
சொல்லட்டும்....
இந்தியத்தாயே எங்களை மன்னி..
இனி மதிப்போம் பெண்குலத்தை..என...!

தோமஸ் சக்கரியா

எழுதியவர் : தோமஸ் சக்கரியா (26-Jun-13, 7:10 pm)
சேர்த்தது : Thomas Zechariah
பார்வை : 114

மேலே