நோன்பு !
நோன்பு!
படைத்தவனும் - அவன்
படைப்பும்
பசி முகவரியில்
Parimaattam ஆன்மாவிற்கு !
பசி -
பசித்திருந்து
ருசியறிய
ஐம்புலனும்
அறனில் நிற்கும் !!
நோன்பின்
தூய்மை அதன்
தாய்மை !
வாய்மை நோன்புக்கு
ஞானம் வரமாகும் !
நோன்பு
உபவாசம் - இது
தவவாசத்தின்
தலைவாசல் !
மாமறை ஓதி மணக்க
இறை அருள் நிறையும் !
ஏழை வரி ஈந்து
ஏகன் அருள் ஏந்தும்
நோன்பை நோட்டு
இரு நோய் அகட்ட
கடமையாம் நோன்பை
உடமையாய் கொண்டே
உயர்வோம் வாழ்வில் என்றும்
கருணை இறையின்
காவல் தேடி !!