மின்னலின் பாத சுவடுகள் என்னில் 555

அழகே...

வினாடி வந்து செல்லும்
மின்னலை போலதான்...

என் வாழ்வில்
நீ வந்து சென்றாய்...

நீ மறுத்து விட்டாய்
காதலை...

மறந்தும் விட்டாய்
என்னை...

தொலைவில் நீ
என்றாலும்...

நீ வந்து சென்ற பாத
சுவடுகள் மட்டும்...

என் இதயத்தில்
பதிந்ததடி...

உன்னை மறக்க
நினைக்கும் போதெல்லாம்...

என் இதயம் சில வினாடி
நின்று துடிக்கிறது...

நான் இறந்தால்
மட்டுமே...

உன்னை மறக்க
முடியும் என்னால்...

என் சொல் கேட்காத
என் சுவாச காற்றும்...

அப்போதும் உன் சுவாச
காற்றை தேடித்தான் அலையுதடி...

என் இதயம் மட்டும்
உன்னை நேசிகவில்லையடி...

என்னில் உள்ள
ஒவொரு செல்லும்...

உன்னை தானடி
நேசிக்கிறது இன்னும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Jul-13, 2:19 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 118

மேலே