பென்சில்-ரப்பர்

பென்சில்:
என்னை மன்னிக்க வேண்டும்.

ரப்பர்:
எதற்காக மன்னிப்பு?

பென்சில்:
நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?

ரப்பர்:

நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காகவே நான் படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன்.அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும்,நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன்.
இதுதான் வாழ்க்கை ..

நன்றி முகநூல் ..

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (16-Jul-13, 10:03 pm)
பார்வை : 249

மேலே