KARUVARAI

கருவறை

உயிர்
உருவாகும் இடமும்
உறங்கும் இடமும்
இருட்டு தான்
கருவறையும்
கல்லறையும் . . .

அன்பு
அதிகம்
தருவதும்
பெறுவதும்
பெண் தான்
தாயும்
காதலியும் ......

காத்திருப்பாள்
தாய்
காத்திருக்க வைப்பாள்
காதலி . . . .

கனிவிருக்கும்
தாயிடம்
கனவிருக்கும்
காதலியிடம் . . .

தன்னை வருத்தி
உன்னை நேசிப்பாள் தாய்
உன்னை வருத்தி தன்னை
உயர்த்துவாள் காதலி . . .

மண்ணாய் மடிந்து
மலர வைப்பாள் தாய்
பொன்னாய் மின்னி
புதிராவாள் காதலி . . .

கருவறை தந்தவள்
தாய்
கல்லறையை காண்பிப்பவள்
காதலி

இடம் மாறினும்
இரண்டிலும் அமைதி தான்
உலகமும் உறவுகளும்
அற்றதால்

எழுதியவர் : Prabha (21-Dec-10, 1:41 pm)
சேர்த்தது : Prabha
பார்வை : 431

மேலே