அடுத்த ரவுண்டு உனக்குத்தான் சிறு கதை

அடுத்த ரவுண்டு உனக்குத்தான்.

செல்லையா எனும் பெரியவர் ஒருவர்.எல்லா வசதிகளும் வீட்டில் உண்டு..ஆனால்--எதுவுமே கிடையாது அவருக்கு.அது என்ன?என்று கேட்பதற்கு விடு கதை அல்ல இது. உண்மையைத்தான் சொல்கிறேன்
ஒரே ஒரு பிள்ளைதான் அவருக்குன் உயர்வாகப்படிக்கவைத்தார்உத்யோகமும் கிடைக்க உதவினார்..மற்றெல்லாம் பெண்மக்கள்.ஆண் வாரிசே ஆளட்டும் என்றேஅத்தனை சொத்துக்களையும் அவனுக்கே எழுதி வைத்தார்.
எழுதி வாங்கும் வரை ஏந்தி ஏந்தித் தாங்கினாள் மருமகள்..கைகுள் வந்ததும் கதவைச் சாத்திவிட்டாள்.சாப்பாடு இல்லை- பாவம்சந்திக்கு வந்துவிட்டார்.ஓய்வூதியம் பெறுவதால் ஓட்டல் சாப்பாடு வருகிறது..அதுவும் இல்லாதவர் கதியென்ன?
மகனும் கண்டு கொள்வத்தில்லை பாவம் அவன் என்ன செய்வான் மனைவிக்கு அடங்கிய மணவாளன்.இவர்களுக்கும் ஒரு மகனிருக்கிறான்இந்தக் காட்சிகளையெல்லாம்-அவன் கூர்ந்து கவனமாகபார்த்துக் கொண்டுதானிருக்கிறான்.
இப்போதுதான் பாட்டி சொன்ன கதை ஒன்று நினைவுக்குவருகிறது.வயதான மாமியாரை மதிக்காத மருமகள் ஒருத்தி இருந்ததாளாம்..மாமியாரை தொழுவத்திலே போட்டு மண் சட்டியொன்றில் பிச்சைக்காரிக்குப் போடுவதுபோல் மீந்து போன பழைய கஞ்சியைத்தான் ஊத்துவாளாம்.பாவம் அந்தக் கிழவியொருநாள் குளிரால்வாடி இறந்தும் போனாளாம்.இதையெல்லாம் கவனித்துக் கொண்டேஇருந்த அவளுடைய பிள்ளை ஓடோடிச் சென்று அந்த ஓட்டைமண் சட்டியை பத்திரமா ஒளித்து வைத்தானாம் அப்போது அந்த தாய் கேட்டாளாம்.
"இந்த அசிங்கம் பிடிச்ச சட்டியைத் தூரே எறியாமல் எதுக்காகப் பத்திரப்படுத்துகிறாய்"என்று.அதற்கு அநதச் சிறுவன் ---."அடுத்த ரவண்டு உனக்கு வேணுமே அதற்காகத்தான் பத்திரப்படுத்துகிறேன்"என்றானாம்.
இன்று நீ எதை விதைக்கிறாயோ அதுவே நாளை உனக்கே விளையும்.என்றுமே இளமை உனக்குச் சொந்தமில்லை.நாளை முதுமை உனக்கும் வரும்.
கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (30-Jul-13, 3:25 pm)
பார்வை : 288

மேலே