தமிழ் எனுயிர்

ஆட்சூழும் மாணிட நட்பு
வேண்டாம் - தமிழேனும்
என் தாய் மொழியான
நீயே போதுமெனக்கு

பாரியும் ஆதவனும் சேர்ந்து
காட்சியளித்தாலும் வியக்க
மாட்டேன் - ஒரு சிறுப்பிள்ளை
தமிழில் கதைத்தால் போதும்
என் இதயத்தை அப்பிள்ளை
பேசும் வரை உறங்கச்
செய்வேன்

தமிழே நீ என்னுடனிருந்தால்
பசியில்லை சுவாசிக்க
காற்று வேண்டியதில்லை
நாவிற்கு தாகமில்லை
தொலைதூரம் நாடந்தாலும்
கால்களும் கண்களும்
சோரவில்லை
உன்னைப் பற்றி எழுத
கைகளும் ஓயவில்லை
எழுத்தாணியின் கூர்மையும்
குறையவில்லை

என் உடலின் குருதியான தமிழே

உலகிற்கு பொன்னும் பொருளுமே
உயிர் செல்வங்கள்
எனக்கோ நியே இவ்வுலகின் மிக
உயரிய செல்வம்

=== க.பிரபு தமிழன்

எழுதியவர் : க.பிரபு தமிழன் (19-Aug-13, 5:30 pm)
பார்வை : 396

மேலே