யானை ....!! ( குழந்தை பாடல் )
கரிய பெரிய யானை
கம்பீரமாய் வருகுது !
காதுகளை ஆட்டியே
கலக்கலாய் வருகுது ...!!
வெள்ளை நிறத் தந்தத்தால்
உள்ளம்கொள்ளை கொள்ளுது !
கள்ளை குடித்து விட்டாற்போல்
பைய பைய நடக்குது ....!!
தும்பிக்கையை நீட்டியே
சில்லறையை வாங்குது
பாகனிடம் கொடுக்குது
பழத்த மட்டும் தின்னுது ....!!
சிரசின் மீது கைவைத்து
ஆசீர்வாதம் வழங்குது !
குழந்தைகளும் பயத்துடனே
தலையை மெல்ல காட்டுது....!!
யானை மீது ஏறிக்கொண்டு
மன்னன் போல எண்ணம் கொண்டு
மிடுக்குடனே பவனிவரும்
சிறுவர்களே... சிந்தை மகிழுங்கள் .....!!!