தேடினேன் கிடைத்தது!

கவிகளில்
இனிமையை தேடினேன் !-உன்
பெயர் கிடைத்தது !
பூக்களில்
வாசத்தை தேடினேன் !-உன்
சுவாசம் கிடைத்தது !
தென்றலில்
குளுமை தேடினேன் !-உன்
பார்வை கிடைத்தது !
நிலவில்
அழகை தேடினேன் !-அங்கு
நீ கிடைத்தாய் !
என்னுள்
உன்னை தேடினேன் !-கிடைத்தது
காதல் !
ஆம்!-அன்பே
உன் மீது நான் கொண்ட காதல்தான் !

எழுதியவர் : anandh (26-Aug-13, 6:41 pm)
சேர்த்தது : asaran
பார்வை : 56

மேலே