பாவமா ?

80 வயதை கடந்த ஒரு தாத்தா , தன் மனைவி நோய்வாய் பட்ட நாளில் வருத்தப்பட்டு பேசுவதாய் எண்ணி இதை எழுதியுள்ளேன் .........


வயது 80ஐ கடந்து விட்டது
வாழ்ந்து முடித்தாகி விட்டது
நானும் என் மனைவியும்
நான்கு தலைமுறை பார்த்தாகி விட்டது
சாவை எதிர் நோக்கி
சந்தோஷமாய் இருக்கிறேன்

எனக்கென்று எதுவும் கேட்டதில்லை
எல்லாமே கொடுத்த இறைவனிடம்
கை கெட்டி நின்னுருக்கேன்
கை நீட்டி கேட்டதில்லை

கண் பார்வை மங்கிப் போச்சு
கேட்குற சக்தி குறைஞ்சிப் போச்சு
கால் நட தளர்ந்து போச்சு
பாவம் எனக்கும் வயசாகிப் போச்சு

நிம்மதியா தூங்குனா( ள் )
நெஞ்சு வலிக்குதுன்னா
என்னால தூக்க முடியல
துணைக்கு ஆள் தேடினேன் - முதல் தடவையா !

எல்லாரும் தூக்கிக்கிட்டு ஓடினாங்க வேகமா
முடியாம நின்னுக்கிட்டிருந்தேன் ஓரமா
எதேதோ பேசிக்கிட்டிருந்தாங்க
எதுவுமே காதுல விழல
இது நான் செஞ்ச பாவமா ?

எழுதியவர் : லாரன்ஸ்.ஆ (4-Sep-13, 8:26 pm)
பார்வை : 59

மேலே