[495] வெருவினார்க்கு அஹிம்சை வீரமாய்த் தோன்றிடாது!

புரணிகள் தவிர்க்க வாரீர்!
பூசலை ஒழிக்க வாரீர்!
கரணிகள் கண்ட றிந்து
காழ்ப்புகள் போக்க வாரீர்!
--------[கரணி= மருந்து]------------
பரணியும் பாட வாரீர்!;
பாரிதில் மகிழ வாரீர்!
தரணியை வெல்ல வாரீர்!
தமிழையும் உயர்த்த வாரீர்!

சிரசினில் கோபம் ஏறச்
சிந்தனை கெட்டுப் போகும்
உரசிடும் பொருட்கள் சூட்டை
உதறிடப் போமோ? காந்தி
பெருமையை மறந்து விட்டோ
பிரிவினைக் குதவி நிற்போம்!
விரலென அழுக விட்டால்
விக்கினம் உடலுக் கன்றோ?

ஒருவிரல் என்று நாட்டை
உயர்த்தியே காட்டி அன்றே
உருவிய வாளைக் கூட
உறையினுள் அனுப்பக் கண்டோம்!
வெருவினார்க்(கு) அஹிம்சை வாழ்க்கை
வீரமாய்த் தோன்றி டாது!
பொருதலால் அழிவே மிஞ்சும்
புரிய ஏன் மறுக்கின் றீரோ?
=====

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (5-Sep-13, 9:18 am)
பார்வை : 93

மேலே