@@@ மழையோடு கற்பனை உறவு @@@

இதமான மழைச்சாரலுடன்
இலகுவான நடை நடக்க
வந்துவிழுந்த மழைத்துளிகள்!!!

மோகம் கொண்டு வந்து
தேகம் தீண்ட நினைத்து கல்லில்
தெறித்த பின் தெளிந்தாயோ
அனுமதியில்லாமல் - பெண்மை
தீண்டினால் அழிக்கப்படுவாயென்று!!!

உள்ளம் புரிந்து என் இதழ்களில்
சத்தமின்றி பக்கம்வந்து தித்திக்க
முத்தமிடுகிறாயே எப்படி
தெரிந்தது என்னுள்ளிருக்கும் -காதல்
உன்னுள்ளும் இருந்ததோ!!!

நனைந்தபடி நான் செல்ல தலை
துவட்டிய தாயின் அன்பில்
உணர்ந்தேன் உன் தாய்மையை
எவ்வளவு அழகாய் - உன் கரங்களால்
என்னை தலை குளிக்கவைத்தாய்!!!

நனைந்த புத்தகத்தை பாதுகாக்க
நான் ஓடி செல்கையில் ஒரு நிமிடம்
மிதமானது உன் வேகம் புரிந்தேன்
தோழமை உணர்வுகொண்டு - என்
இனிய நட்ப்பாக வந்தது நீயென்று!!!

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (8-Sep-13, 4:58 pm)
பார்வை : 146

மேலே